காசோலை மோசடி வழக்கில் வழக்கறிஞருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

by Editor / 06-04-2023 08:00:52pm
காசோலை மோசடி வழக்கில் வழக்கறிஞருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

தென்காசி மாவட்டம், தென்காசி பகுதியை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்ற வழக்கறிஞர், பல் மருத்துவரான சிதம்பரம் என்பவரிடம் ரூ.10.50 லட்சத்திற்கான காசோலையை கொடுத்துள்ளார்.

 அந்த காசோலையை சிதம்பரம் வங்கியில் பண பரிமாற்றத்திற்கு கொடுத்தபோது, வங்கியில் பணம் இல்லாத காரணத்தினால் முகமது இஸ்மாயில் கொடுத்த காசோலையானது திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பல் மருத்துவரான சிதம்பரம், முகமது இஸ்மாயில் தனக்கு காசோலை கொடுத்து ஏமாற்றி விட்டதாக செங்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் மீதான விவாதங்கள் நிறைவு பெற்று இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த செங்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுனில் ராஜா காசோலை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட வழக்கறிஞர் முகமது இஸ்மாயிலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.20 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

 

Tags :

Share via