ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்
டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானம் செவ்வாயன்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்குவதற்கு அனுமதி கோரியது. ஆனால், விமானம் வழக்கம்போல் தரையிறங்கியது. இந்த விமானம் புனேவில் இருந்து புறப்பட்ட நிலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் விமானத்தின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து, விமானத்தின் பைலட் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னுரிமை கேட்டுள்ளார். விமானத்தில் 180 பயணிகள் இருந்தனர், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். செவ்வாயன்று முன்னதாக, ஸ்ரீநகருக்குச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தவறான எச்சரிக்கைக்குப் பிறகு டெல்லி விமான நிலையத்திற்குத் திரும்பியது.
Tags :