ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி- நல்லி ரயில் நிலையங்கள் இடையே வேலாயுதபுரம் இரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சுமார் 70 வயதில் மதிக்கத்தக்க முதியவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து கோவில்பட்டி கொடுத்த கிராம உதவியாளர் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் தூத்துக்குடி இருப்பு பாதை காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Tags :