கல்லூரி பேராசிரியர்கள் தாக்கியதால் மாணவர் காயம்

by Staff / 20-04-2023 03:25:57pm
கல்லூரி பேராசிரியர்கள் தாக்கியதால் மாணவர் காயம்

தூத்துக்குடி முள்ளக்காடு அருகே உள்ள ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நேசமணி
(22). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் விஸ்காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை கல்லூரியில் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வு எழுதும் அறையில் ஏற்கனவே பாடம் நடத்திய போது எழுதப்பட்ட விடைகள் இருந்ததாக கூறப்படுகிறது. அதனை மாணவர்கள் தேர்வின் போது பார்த்து எழுதியதாக
கூறப்படுகிறது. இதனால், தேர்வு எழுதிய மாணவர்களை சஸ்பெண்ட் செய்வதாக விஸ்காம் துறை பேராசிரியர்கள் சுரேஷ் மற்றும் சீனிவாச மணிகண்டன் ஆகியோர் கூறியுள்ளனர்.இது தொடர்பாக மாணவன் நேசமணி விளக்கம் அளிக்க முற்பட்டுள்ளார். அப்போதுஆசிரியர்கள் இருவரும் சேர்ந்து நேசமணியை அறைக்குள் இழுத்துச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் மாணவர்கள் இணைந்து கதவைத் திறந்து நேசமணியைமீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.தற்போது நேசமணிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ குழு மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் காரணமாக அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல்தடுக்க கல்லூரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதனால்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via