12 காங்கிரஸ் தலைவர்களுக்கு தடுப்புக் காவல்

by Staff / 24-04-2023 12:38:54pm
12 காங்கிரஸ் தலைவர்களுக்கு தடுப்புக் காவல்

பிரதமர் நரேந்திர மோடியின் கேரளா வருகையை முன்னிட்டு, கொச்சியில் 12 காங்கிரஸ் தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பிரதமரின் வருகையின் போது கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக வந்த தகவலை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, நகரின் பல்வேறு பகுதிகளில், 2,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாள் பயணமாக பிரதமர் திங்கள்கிழமை பிற்பகல் கொச்சியின் கடற்படை விமான நிலையத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து தேவாரத்தில் உள்ள சேக்ரட் ஹார்ட் கல்லூரிக்கு சாலை மார்க்கமாக செல்கிறார்.

 

Tags :

Share via