11 ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் என்றும் நினைவு கூறப்படும்- பிரதமர் நரேந்திர மோடி
சத்தீஸ்கர் மாநிலத்தில் தாண்டே வாடா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து ராணுவ வீரர்கள் விரைந்தனர். அப்போது அங்கு எதிர்பாராத விதமாக வீரர்கள் அனைவரையும் சுற்றி வளைத்த மாவோயிஸ்டுகள் கொடூரமாக ராணுவ வீரர்களை தாக்கினார். இதன் தொடர்ச்சியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனம் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தவெடிக்குண்டு வெடித்ததில்ஓட்டுநர் உள்பட பதினோரு ராணுவ வீரர்களின்உடல் சிதறியது .கொடூர தாக்குதல் சம்பவத்தில் பலியான பதினோரு ராணுவ வீரர்களுக்கு சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல்கண்டனம்தொிவித்ததோடு மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில் அரசு முனைப்பு காட்டும் என்றார். பிரதமர் நரேந்திர மோடியும் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் உயிரிழந்த 11 ராணுவ வீரர்கள் துணிச்சலுடன் எதிர் கொண்டு வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும்அவா்களின் உயிர் தியாகம் என்றும் நினைவு கூறப்படும் என்றும் அவர் தம் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags :