ரயிலில் சிக்கிய முதியவர்.. மீட்ட பெண் காவலர்

by Staff / 27-04-2023 04:22:05pm
ரயிலில் சிக்கிய முதியவர்.. மீட்ட பெண் காவலர்

ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த முதியவரை ரயில்வே பெண் காவலர் ஒருவர் மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலம் புருலியா ரயில் நிலையத்தில் ரயில் புறப்பட்ட உடன் அவசரமாக ரயிலில் ஏற முயன்ற முதியவர் நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். இந்நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ரயில்வே பெண் காவலர் உடனடியாக ஓடி வந்து அந்த முதியவரை இழுத்து பத்திரமாக மீட்டார். மேலும், சக கவல்துறையினர் முதியவரை மீட்க உதவியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via