பாஜக மாநில நிர்வாகி சங்கர் வெட்டிக்கொலை  9 பேர் நீதிபதி முன்பு சரணடைந்தனர்.

by Editor / 28-04-2023 08:53:04pm
பாஜக மாநில நிர்வாகி சங்கர் வெட்டிக்கொலை  9 பேர் நீதிபதி முன்பு சரணடைந்தனர்.

சென்னை பூவிருந்தவல்லியில் பாஜக மாநில நிர்வாகி சங்கர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், எழும்பூர் நீதிமன்றத்தில் 9 பேர் சரணடைந்துள்ளனர்.20 - 25 வயது மதிக்கத்தக்க 9 பேர் 13வது குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பு சரணடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சிமன்ற தலைவர் பிபிஜி.சங்கர் (42). இவர் பாஜக எஸ்.சி.-எஸ்.டி. பிரிவு மாநில பொருளாளராக இருந்து வருகிறார். இவர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு சென்னையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு காரில் டிரைவருடன் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது  வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

 

Tags :

Share via