லாரி கவிழ்ந்து கிளீனர் பலி
நொய்டாவில் மூங்கில் குழாய்களை ஏற்றி சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நடைபாதை மீது மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் லாரி கிளீனர் வாகனத்தின் அடியில் விழுந்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்தில் இருவர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :