ராகுலுக்கு தண்டனை.. நீதிபதிக்கு பதவி உயர்வு

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் மோடி என்ற பெயர் கொண்டவர்களை அவதூறாக பேசினார் என்ற புகாரில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் தலைமை நீதித்துறை நடுவராக இருந்த எச்.எஸ்.வர்மா என்பவர் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில், சூரத் தலைமை நீதித்துறை நடுவராக இருந்த எச்.எஸ்.வர்மாவுக்கு ராஜ்கோட் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
Tags :