நிதி நிறுவன அதிபர்கள் வீடுகளில் அதிரடி சோதனை  ரூ.15 கோடி, ரூ.5 கோடி தங்கம் பறிமுதல்.

by Editor / 06-05-2023 07:35:49pm
நிதி நிறுவன அதிபர்கள் வீடுகளில் அதிரடி சோதனை  ரூ.15 கோடி, ரூ.5 கோடி தங்கம் பறிமுதல்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும்  10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றன.கட்சி தலைவர்கள்,தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.வாக்காளர்களை கவரும் வகையில் முன்னணி அரசியல் கட்சியினர்  ரூபாயை தண்ணி ராக செலவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் உதவி செய்வதற்காக பணம் பதுக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததையடுத்து, பெங்களூரு மற்றும் மைசூரில் உள்ள பெரிய நிதி நிறுவனங்களின் உரிமையாளர்களின் வீடுகளில் வருமானவரித்துறையினர் மூலம் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் நிதிநிறுவன அதிபர்களின் வீடுகளில் ரூ.15 கோடி ரொக்கம், ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags :

Share via