அரசு பெண் மருத்துவரை கொலை செய்த அரசு பள்ளி ஆசிரியர்.

by Editor / 10-05-2023 12:05:30pm
 அரசு பெண் மருத்துவரை கொலை செய்த அரசு பள்ளி ஆசிரியர்.

கேரள மாநிலம் கொட்டாரக்கரை பகுதியைச் சார்ந்தவர் பள்ளி ஆசிரியர் சந்திப்  இவர் மதுவிற்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது, மேலும் இதனுடன் ஏராளமான போதை பொருட்களையும் உட்கொண்டு வந்துள்ளார், இந்த நிலையில் நேற்று இவர் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுப்பட்டுள்ளார் ,அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடமும் மோதலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவரது குடும்பத்தினர் கொட்டாரக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த போலீசார் இரவோடு இரவாக சந்திப்பை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் சந்திப்பை இன்று மருத்துவ பரிசோதனைக்காக கொட்டாரக்கரை தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு பெண் மருத்துவர் வந்தனா தாஸ் என்பவர் சிகிச்சை பிரிவில் இருந்து உள்ளார். அவரிடம் சந்திப்பை போலீசார் அழைத்துச் சென்ற பொழுது சந்திப் பெண் மருத்துவர் வந்தன தாஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடிய கத்திரிக்கோலை எடுத்து மருத்துவரை சரமாரியாக  குத்தி கொலை செய்தால் இதனை சற்றும் எதிர்பாராத போலீசாரும் அதிர்ச்சி அடையவே சுதாரித்துக் கொண்டு சந்திப்பை பிடிக்கும் பொழுது மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் போலீசாரையும் அவர் கத்தியால் குத்தியுள்ளார் இதில் அவர்களும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொட்டாரக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகள்,  ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள்,  மருத்துவ கல்லூரிகள்  என அனைத்து பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பட்ட பகலில் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியாக ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via