6 டன் ரசாயன மாம்பழம் பறிமுதல்
சேலத்தில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் வந்துள்ளது. இந்நிலையில், சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர். இதில், ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 6 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்தனர். மேலும், உரிமம் இல்லாமல் ரசாயனம் தெளித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். மேலும், மாம்பழங்கள் வாங்கும் போது அதில் ரசாயனம் உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
Tags :