தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை
தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய 'மோகா' புயலானது போர்ட் பிளேயரில் இருந்து வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் வலுப்பெற்று 14ஆம் தேதி நண்பகல் தென்கிழக்கு வங்கக்கடல், வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும். இதனால், இன்று முதல் 16ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.
Tags :