கொள்ளிடம் ஆற்றில் குளித்த ஒருவர் உயிரிழப்பு.2 பேரைதேடும்பணி தீவிரம், ஒருவர் மீட்பு.

by Editor / 14-05-2023 07:04:18pm
கொள்ளிடம் ஆற்றில் குளித்த ஒருவர் உயிரிழப்பு.2 பேரைதேடும்பணி தீவிரம், ஒருவர் மீட்பு.

திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் செயல்பட்டுவரும் ஆண்டவன் வேத பாடசாலையில் தங்கி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவர்கள் வழக்கமாக அதிகாலை நேரங்களில் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க செல்வார்கள். இந்நிலையில் இன்று காலை யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் என்ற 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கோபால கிருஷ்ணன் என்ற சிறுவன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். ஆற்றில் மூழ்கிய அபிராம்(13), ஹரி பிரசாத்(14) ஆகியோரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

 

Tags :

Share via