கள்ளச்சாராய வேட்டை - 46 பேர் கைது

by Staff / 15-05-2023 12:36:59pm
கள்ளச்சாராய வேட்டை - 46 பேர் கைது

திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெற்ற கள்ளச்சாராய வேட்டையில் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரி சுரேஷ் குமாரின் உத்தரவின் படி நேற்றைய தினம் நடைபெற்ற சோதனையில் 44 கள்ள சாராய வழக்குகள் பதிவு ஆகியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார். இதனையொட்டி தமிழ்நாடு முழுக்க 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 199 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags :

Share via