மருந்து  நிறுவனங்களிடம் 65 கோடி  தடுப்பூசிகள் பெற மத்திய அரசு ஒப்பந்தம்

by Editor / 17-07-2021 04:24:09pm
மருந்து  நிறுவனங்களிடம் 65 கோடி  தடுப்பூசிகள் பெற மத்திய அரசு ஒப்பந்தம்



 கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.
சமீபத்தில் ரஷியா நிறுவனம் தயாரித்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை சில தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்து கட்டணம் அடிப்படையில் பொதுமக்களுக்கு போட்டு வருகின்றன.
தடுப்பூசியை பொறுத்தவரை முதலில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு போடப்பட்டது. அதன்பிறகு 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும், பிறகு 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் போடப்பட்டது.தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் அடுத்த மாதம் இறுதியில் இருந்து கொரோனா 3-வது அலை பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள்.
ஆனால் தடுப்பூசி திட்டத்தை பொறுத்தவரை நாடு மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. இந்தியாவில் இதுவரை 36 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது பொதுமக்கள் மத்தியில் கொரோனா 3-வது அலை அச்சம் எழுந்துள்ளது. எனவே கொரோனா 3-வது அலையை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசை மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்கவும், அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையிலும் 65.5 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது.

 

Tags :

Share via