பேஸ்புக் காதல் - சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை

by Staff / 02-06-2023 02:20:57pm
பேஸ்புக் காதல் - சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை

திரிபுரா மாநிலம் உதயப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பேஸ்புக் மூலம் 21 வயது இளைஞருடன் ஆறு மாத காலமாக காதல் வயப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று அந்த சிறுமி இளைஞரை சந்திக்க பூங்காவிற்கு சென்று உள்ளார். அந்த சிறுமியை பூங்காவில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று அந்த இளைஞன் உடன் மேலும் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறுமியை காரில் ஏற்றி சென்று ராஜார்பக் பகுதியில் ஓடும் காரில் இருந்து சிறுமியை வீசிவிட்டு மூவரும் தப்பி சென்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via