2 சிறுமிகளிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட  குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை 

by Editor / 26-06-2023 08:32:09pm
2 சிறுமிகளிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட  குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்கா சட்டுவந்தாங்கல் கிராமத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வேலு என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து மற்றும் ஆறு வயதுடைய இரண்டு சிறுமிகளிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக செய்யார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு திருவண்ணாமலை மகிளா விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டதில் இன்று விசாரணை முடிவில் குற்றவாளி வேலுவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.
 

Tags : பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட  குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை 

Share via

More stories