ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது- பிரேமலதா

by Staff / 30-06-2024 12:36:02pm
ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது- பிரேமலதா

கல்வராயன் மலையில் ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, "கள்ளச்சாராயத்தால் கடந்த ஆண்டே 22 பேர் உயிரிழந்துள்ளனர், அரசு இப்போது தான் விழித்துள்ளது. கள்ளச் சாராயத்தால் தமிழ்நாட்டில் இனி ஒரு மரணம் கூட நிகழ கூடாது. தற்போது கைது செய்யப்பட்டவர்கள் மீதும், புதிய சட்டம் பாயுமா?" என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளார்.

 

Tags :

Share via