குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஆறு சிறுமிகள் தப்பி ஓட்டம்..

by Staff / 07-04-2023 04:57:13pm
 குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஆறு சிறுமிகள் தப்பி ஓட்டம்..

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார்பாளையம் அருகே தாத்திமேடு சாலபோகம் பகுதியில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது.இங்கு தாய் தந்தையை இழந்த ஆதரவற்ற குழந்தைகள், கல்வி நிலையை தொடர இயலாத குழந்தைகள் தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றனர்.இது மட்டும் இல்லாமல் சிறு வயதில் திருமணம் வழக்கு மற்றும் காதல் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கி குறைந்த நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்ட சிறுமிகள், குழந்தைகள் நலக் குழுமத்தின் மூலம் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.இந்த காப்பகத்தில் குழந்தைகள், சிறுமிகள் என 29 பேர் உள்ளனர்.இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 7 சிறுமிகளின் காதல் பிரச்சனையால் குழந்தைகள் நல குழுமத்தினரால் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் நேற்றிரவு வழக்கம்போல் சிறுமிகள் அனைவரும் இரவு உணவு அருந்திவிட்டு தூங்க சென்றுவிட்டனர்.இந்நிலையில் பாதுகாவலர் இரவு பணியில் இருந்த பாதுகாவலரின் அறையை தாழிட்டு விட்டு 6 சிறுமிகள் தப்பி ஓடினர்.
இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து காவல்துறைக்கு அளித்த புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி ஆறு சிறுமிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
அதே போல் சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல குழுமத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் காப்பகத்தில் இருந்து தப்பி ஓடிய முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த சிறுமியும் கரசங்கால் பகுதியைச் சேர்ந்த சிறுமியும் தங்கள் வீடுகளுக்குச் சென்ற நிலையில் அவர்களின் பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து சிறுமிகளை ஒப்படைத்தனர்.மீதம் உள்ள நான்கு சிறுமிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் தப்பி ஓடும் வகையில் அஜாக்கிரதையாக இருந்த காப்பக உதவியாளர் தீனா தேவி, பாதுகாவலர் சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் பணிவிடை நீக்கம் செய்து சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

Tags :

Share via