இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 07-04-2023 04:51:52pm
 இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் அபிநயா (23). காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் வாடகைக்கு குடியிருந்து சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் செல்போன் உதிரி பாகங்கள் தயார் செய்து பாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டின் அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் துப்பட்டா மூலம் அபிநயா தூக்கில் தொங்கியதை கண்டறிந்த சக தோழிகள் கூச்சலிட்டுள்ளனர்.பின்னர் பகுதி பொதுமக்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று அபிநயாவை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அவர்கள் வந்து பரிசோதனை செய்ததில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்தனர்.தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு மீட்டு வந்த மணிமங்கலம் போலீசார் அபிநயாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சக தோழிகளிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் அபிநயா தற்கொலை செய்துகொண்டது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.மேலும் தனியார் நிறுவனத்தில் பணி சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமா என சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via