தக்காளியை மூட்டை மூட்டையாக திருடிய கும்பல்

by Staff / 06-07-2023 02:39:28pm
தக்காளியை மூட்டை மூட்டையாக திருடிய கும்பல் தக்காளி விலை உயர்ந்து ரூ.100-ஐ தாண்டி விற்கப்படுகிறது. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தக்காளியை குறிவைத்து சிலர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் தெலங்கானாவின் மகபூபாபாத் மாவட்டம் டோர்னக்கல்லில் வியாபாரி ஒருவரின் 20 கிலோ தக்காளி, 4 கிலோ பச்சை மிளகாய் ஆகியவற்றை திருடர்கள் திருடிச் சென்றனர். மேலும், கர்நாடகாவில் ரூ.100 மதிப்புள்ள 60 மூட்டை தக்காளியை திருடர்கள் திருடிச் சென்றனர். மகாராஷ்டிராவிலும் தக்காளி திருட்டு தொடர்ந்து வருவதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
 

Tags :

Share via