பிரம்ம கமலம் பூ பூத்தது
சேந்தமங்கலம் அருகே உள்ள முத்துக்காபட்டியில் வசித்து. வருபவர் கலையரசன். இவரது வீட்டில் பிரம்ம கமலம் செடியை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அந்த செடியில் பிரம்ம கமலம் பூ பூத்தது. அப்போது நல்ல மணம் வீசியது. அந்த பூவானது ஒன்றரை வருடத்திற்கு ஒரு முறை தான் இரவில் பூக்கும். அதேபோல கடந்த ஜூன் மாதம் அவரது வீட்டில் மொட்டு வைத்த அந்த பிரம்ம கமலம் பூ நேற்று இரவு பூத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அதிசய பிரம்ம கமலம் பூவை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்த்து பிரமித்து சென்றனர்.Tags :