டிஐஜி தற்கொலை - சீமான் காட்டம்

by Staff / 08-07-2023 04:33:23pm
டிஐஜி தற்கொலை - சீமான் காட்டம் கோவை சரக காவல்துறை டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், அவர் 6 மாத விடுமுறை கேட்டும் கொடுக்கவில்லை என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இது குறித்து பேசிய சீமான், “விஜயகுமாரின் தற்கொலைக்கு பணிச்சுமையும், சில அழுத்தங்களும் காரணமாக இருக்கலாம். இதனை தவிர்க்க காவல்துறையினருக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். மேலும், டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
 

Tags :

Share via

More stories