எந்தவித ஈகோவும் இருக்கக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

by Staff / 09-07-2023 05:28:51pm
எந்தவித ஈகோவும் இருக்கக்கூடாது - அன்புமணி ராமதாஸ் கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அரசியல் சாசன பொறுப்பில் இருக்கும் முதல்வரும் ஆளுநரும் இணைந்து செயல்படவேண்டும், அதுதான் தமிழக நலனுக்கு நல்லது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மக்களால் தேர்வுசெய்யப்பட்ட முதல்வர் என்ன சொல்கிறாரோ அதனை செயல்படுத்துவது தான் ஆளுநர் கடமை. ஆளுநர் மற்றும் முதல்வர் இடையே எந்தவித ஈகோவும் இருக்கக்கூடாது. ஆளுநர் என்பவர் நீதிபதிகளைப்போல், ஆளுநர் தனிப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரது அரசியல் கருத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று தெரிவித்தார்.
 

Tags :

Share via