பேனா சின்னம் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

by Staff / 10-07-2023 11:37:44am
பேனா சின்னம் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை சென்னை மெரினா கடலுக்குள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக ரூ.81 கோடி செலவில் பேனா சின்னம் அமைக்க தமிழக அரசு பணிகளை தொடங்கியுள்ளது. இதற்கு மீனவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடலில் பேனா சின்னம் வைப்பதற்கு தடை விதிக்கக்கோரி மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி நரசிம்ஹா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.
 

Tags :

Share via