6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்
நேபாளத்தில் 5 வெளிநாட்டு பயணிகள் உட்பட 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் இன்று காலை மாயமானது. நேபாளத்தில் உள்ள சொலுகும்புவில் இருந்து காத்மாண்டுவிற்கு சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை காலை 10.12 மணி முதல் இழந்தது. இதனை தொடர்ந்து, அந்த ஹெலிகாப்டரையம் 6 பயணிகளையும் தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இமயமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் நேபாள நாட்டில் விமான விபத்துக்கள் அடிக்கடி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. <br /> Tags :