வெறிநாய் கடித்து ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதி

by Staff / 11-07-2023 03:08:44pm
வெறிநாய் கடித்து ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நெற்கட்டும்செவல்  பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாறைப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்களை விரட்டி விரட்டி வெறிநாய் கடித்ததில் 7 பெண்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரே நேரத்தில் வேலம்மாள் (60) பேச்சியம்மன் ( 60 ) கிருஷ்ணம்மாள் (40)குருவம்மாள் (70) ராமத்தாள் (60) உட்பட 7 பேர் வெறிநாய் கடிக்கு ஆகியுள்ளனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாரர். இந்நிலையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா நாய் கடித்து சிகிச்சைக்கு வந்தவர்களிடம் விவரங்களை கேட்டறிந்து, வேகமாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இதில் படுகாயம் அடைந்த ராமாத்தாளை, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மற்ற அனைவரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சமீப காலமாக இப்பகுதியில் வெறிநாய் தொந்தரவு இதுவரை இருந்ததில்லை. மேலும் இந்த கிராமத்தில் தெரு நாய்கள் கிடையாது. இந்நிலையில் திடீரென கிராமத்திற்குள் புகுந்த வெறிநாய், கண்ணில் தட்டுப்பட்டவர்கள் எல்லோரையும் கடித்திருப்பது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்று வெறிபிடித்து அலையும் நாய்களை பிடிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Tags :

Share via