தேசத்தின் கனவுகளை சுமக்கும் சந்திரயான் - 3

by Staff / 14-07-2023 12:50:26pm
தேசத்தின் கனவுகளை சுமக்கும் சந்திரயான் - 3

நிலவை ஆய்வு செய்வதற்காக, இந்தியா சார்பாக சந்திரயான் 3 விண்கலம் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி 35 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில், “சந்திரயான்-3 மூன்றாவது சந்திரப் பயணம் தொடங்க உள்ளது. தேசத்தின் நம்பிக்கையையும், கனவையும் சந்திரயான்-3 விண்கலம் சுமந்து செல்கிறது. இந்திய விண்வெளித்துறையில் இன்றைய தினம் எப்போதும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via