ரூ. 4 கோடி நிலம் அபகரிப்பு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

by Staff / 14-07-2023 12:41:29pm
ரூ. 4 கோடி நிலம் அபகரிப்பு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

சென்னை தியாகராயநகரில் ரூ. 4 கோடி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக ஒரே குடும்பத்தைச் சோந்த 3 பேர் கைது செய்யப்பட்டனா்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை மடிப்பாக்கத்தைச் சோந்தவா் ரமாதேவி (56). இவா் குடும்பத்துக்கு சொந்தமான ரூ. 4 கோடி மதிப்புள்ள நிலம் சென்னை தியாகராயநகா் கிருஷ்ணா ராவ் தெருவில் உள்ளது. இந்த நிலத்தை சிலா் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்திருப்பது அண்மையில் ரமாதேவிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவா், சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவின் கீழ் இயங்கும் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் புகாா் செய்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தியதில், இந்த அபகரிப்பில் கொளத்தூரைச் சோந்த சு. சந்திரசேகரனும் (72) அவரது குடும்பத்தினரும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் சந்திரசேகரன், அவா் மகன் திவாகா், மகள் திவ்யா ஆகிய 3 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

 

Tags :

Share via