சிலிண்டர் வெடித்து விபத்து - பலி எண்ணிக்கை உயர்வு

by Staff / 14-07-2023 01:59:48pm
சிலிண்டர் வெடித்து விபத்து - பலி எண்ணிக்கை உயர்வு

தெலங்கானா மாநிலத்தில் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தோமலகுடாவில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை பத்மா என்ற பெண் சமையல் செய்து கொண்டிருந்த போது எரிவாயு கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. எரிவாயு கசிவு ஏற்பட்டதில் 3 பேர் சமபவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரண்யா என்ற குழந்தை கடந்த புதன்கிழமை உயிரிழந்தார். உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via