செந்தில் பாலாஜி வழக்கு - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

by Staff / 14-07-2023 04:19:22pm
செந்தில் பாலாஜி வழக்கு - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான் என உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்துள்ளார். செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் ஏற்கெனவே இரண்டு நீதிபதிகள் இருவேறு தீர்ப்புகள் அளித்திருந்தனர். இந்நிலையில் இன்று தீர்ப்பளித்து மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன், இரு நீதிபதிகள் அமர்வில் கைது செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி தெரிவித்த காரணங்களுடன் ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என்றும், அவர் குற்றம் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

Tags :

Share via