விபச்சாரத்துக்கு அழைத்த 3 பேர் கைது

by Staff / 15-07-2023 11:35:06am
விபச்சாரத்துக்கு அழைத்த 3 பேர் கைது

சேலம் மாவட்டம்  மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் (29). இவர் நேற்று முன்தினம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் சுந்தரேசனை விபச்சாரத்திற்கு அழைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து வாலிபரை விபச்சாரத்திற்கு அழைத்த இடங்கணச்சாலை பகுதியை சேர்ந்த 29 வயது பெண், வாழப்பாடி பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் மற்றும் இளம்பிள்ளையை சேர்ந்த பிரகாஷ் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
 

 

Tags :

Share via