நெல்லை,திண்டுக்கல்லில் நடந்த விபத்துக்களில் 4பேர் பலி
நெல்லை மாவட்டம் நாங்குனேரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து.2 பேர் பலி 4 பேர் படுகாயம்.காரில் வந்த ராமநாதபுரம் ஏர்வாடி பகுதியை சேர்ந்த சேக் அப்துல்லா (25),அமிர் அப்பாஸ் (25) ஆகிய இருவரது உடலும் மீட்பு.படுகாயமடைந்த 4 பேர் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.நான்குனேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்திவருகின்றனர்.இதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஈரோட்டிலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசுபேருந்து வேடசந்தூர் பஸ் டிப்போவில் டீசல் நிரப்பிவிட்டு பின்னோக்கி வந்தபோது இருசக்கர வாகனத்தில் சென்ற திண்டுக்கலை சேர்ந்த பாலச்சந்தர்,ராஜேஸ் ஆகிய இருவர் மீதும் மோதியதில் இருவரும் சம்பவயிடத்திலேயே பலியாயினர்.
Tags :