40 தமிழக மீனவர்களை விடுதலை
பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்திற்கு வருவதை ஒட்டி தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது. நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறைகளில் உள்ள 40 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி நடுக்கடலில் கைது செய்வதும், விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி உள்ளது. இந்த நிலையில், 3 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். இன்று ராமேஸ்வரம் செல்லவுள்ளார். இந்த நிலையில், இலங்கை சிறைகளில் உள்ள 40 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Tags :