மனைவியை கொடூரமாக வெட்டி கொன்ற கணவன்

by Staff / 16-07-2023 02:18:20pm
மனைவியை கொடூரமாக வெட்டி கொன்ற கணவன்

கணவன் ஒருவன் தன் மனைவியைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் ஹைதராபாத்தில் உள்ள போயின்பல்லி பகுதியில் நடந்துள்ளது. நூதன் காலனியை சேர்ந்த தம்பதி சத்தியநாராயணா, ஜான்சிராணி. அவர்கள் சில காலமாக சண்டை போட்டு வருகின்றனர். டியூட்டிக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு சத்யநாராயணா சென்றார். இதற்கு மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால், கத்தியால் சரமாரியாக மனைவியை வெட்டினார். அப்போது வழியில் வந்த அவரது அண்ணன் மனைவி ஷீலாவை கத்தியால் குத்தினார். அதன் பின் சத்யநாயராயணா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தகவல் அறிந்த போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via