கலைஞர் உரிமைத்தொகை-சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாளை முதல் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள்.

by Admin / 19-07-2023 11:51:40am
கலைஞர் உரிமைத்தொகை-சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாளை முதல் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள்.

 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாளை முதல் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது என்றும் கலைஞர் உரிமைத்தொகை வழங்குவது குறித்த வாட்ஸ் அப், சமூக ஊடங்களில் வரக்கூடிய தவறான கருத்துக்களை நம்ப வேண்டாம் என்றும் வங்கி கணக்குகள் இல்லாத நபர்களுக்கு முகாம்களிலே  வங்கி கணக்கு உருவாக்கி தரப்படும் என்றும் அனைத்து நியாயவளக்கடைகளின் முகாம் குறித்த அறிவிப்பு  ஒட்டப்படும்என்றும்  வரும் 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் நாலாம் தேதி வரை முதற்கட்ட முகாம் நடைபெற உள்ளதாகவும் நிரந்தர குடியிருப்பு மற்றும் முகவரி இல்லாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று சென்னை மாநகராட்சி  ரிப்பன் மாளிகையில் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் அடங்கி ஆலோசனை குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்புஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம்தெரிவித்தார். 

 

Tags :

Share via