டெங்கு போன்ற விஷகாய்ச்சலை கட்டுப்படுத்தாத திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனங்கள்!-
டெங்கு போன்ற விஷ காய்ச்சல்களால் அவதியுறும் மக்கள்! சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி காய்ச்சலை கட்டுப்படுத்தாத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள்! கடந்த இரண்டு ஆண்டு கால விடியா தி.மு.க. அரசின் அலங்கோல நிர்வாகத்தாலும்,சுகாதாரத் துறையின் அலட்சியப் போக்காலும் அரசு மருத்துவமனைகளையே நம்பி இருக்கும் பாமர மக்கள் முறையான சிகிச்சை இல்லாமல், மருந்து மாத்திரைகள் கிடைக்காமல் தங்கள் உயிரைக் காக்க போராடும் அவலம் ஏற்பட்டுள்ளது, "நோய் நாடி, நோய்முதல் நாடி... என்ற வள்ளுவன் அறிவுரைக்கேற்ப, பரவி வரும் நோய்களின் மூலக்கூறுகளை கண்டறிந்து அவைகளை ஒழிக்கும் பணியை தொய்வில்லாமல் செய்து அப்பாவி மக்களின் உயிரைக் காக்க வேண்டும் என்று இந்த மக்கள் விரோத விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் அ.தி.மு.க பொதுச்செயலாளா்எடப்பாடி பழனிசாமி அறிக்கை.
Tags :