ரவுடிகள் இருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

by Editor / 01-08-2023 06:56:46am
ரவுடிகள் இருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

சென்னை தாம்பரம் அருகே காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ரவுடிகள் உயிரிழந்துள்ளனர். ஊரப்பாக்கம் பகுதியில் ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய இருவர் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய இரண்டு ரவுடிகள் உயிரிழந்துள்ளனர். காரணை புதுச்சேரி செல்லும் பிரதான சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் மீது தாக்குதல் நடத்திய நிலையில் போலீசார் என்கவுன்ட்டர் செய்துள்ளனர். உதவி ஆய்வாளரை ரவுடிகள் வெட்டியதால் என்கவுன்ட்டர் நடத்தியதாக போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via