மறுஉடற்கூறு ஆய்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

by Editor / 19-07-2022 12:49:17pm
மறுஉடற்கூறு ஆய்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மறு பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி உடல் மறுஉடற்கூறாய்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மாணவியின் தந்தை தரப்பு செய்த மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அதேவேளையில் தற்போது உயர்நீதிமன்ற உத்தரவு படி நடைபெறும் மறுஉடற்கூறு ஆய்வுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். வழக்கு நாளை பட்டியலிடப்படும்  எனவும் உயர்நீதிமன்றம் அமைத்த மருத்துவர் குழுவை குறை கூறவேண்டாம் என கூறியுள்ளனர்.

 

Tags :

Share via