ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை- கொள்ளை குறித்து- அ,இ,அ,தி.மு.க.(ஓபிஎஸ் )அணி மற்றும்  அ..ம..மு..க..சார்பில்ஆர்ப்பாட்டம்

by Admin / 01-08-2023 08:13:44pm
 ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை- கொள்ளை குறித்து- அ,இ,அ,தி.மு.க.(ஓபிஎஸ் )அணி மற்றும்  அ..ம..மு..க..சார்பில்ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிழக்கு, மேற்கு, தெற்கு பகுதி அ,இ,அ,தி.மு.க.(ஓபிஎஸ் )அணி மற்றும்  அ..ம..மு..க..சார்பில் நிர்வாகிகளை இணைத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை மர்ம நிகழ்வுகள் குறித்து சரியான விசாரணை நடத்த வேண்டும் என்றும் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்றும் மாபெரும் கண்டன   ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

'கொடுத்த வாக்கு என்ன ஆச்சு... கோடநாடு வழக்கு என்ன ஆச்சு ....

90 நாள் என்றாயே .... 900 நாள் வந்தாச்சு ....

மர்ம சாவு யாராலே அதில் மறைந்திருப்பது யாருங்க

குடியிருந்த கோயிலுக்குள்ளே குற்றம் செய்தது யாருங்க'

போன்ற கோஷங்களை  எழுப்பினர் .

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல்  ஓபிஎஸ் அணியின்  கிழக்கு மாவட்ட  கழகச் செயலாளர் பி, சுப்பிரமணியன் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பசும்பொன்தெற்கு மாவட்டகழகச் செயலாளர் வைகை பாலன்சுப்புரத்தினம் தேர்தல் பிரிவு செயலாளர் செல்லப்பாண்டி அ.ம. மு.க தெற்கு நல்லுச்சாமி மேற்கு மாவட்ட அ.ம.மு.க.கழகச் செயலாளர் மற்றும் கழக உறுப்பினர்கள் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via