எஸ். ஐ. மீது தாக்குதல்: இளைஞா் கைது

by Staff / 03-08-2023 02:06:12pm
எஸ். ஐ. மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை அண்ணா சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.சிந்தாதிரிப்பேட்டை சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக (எஸ். ஐ. ) பணியாற்றுபவா் காா்த்திகேயன் (54). இவா் பிற போலீஸாருடன், அண்ணாசாலையில் உள்ள தாராப்பூா் டவா் அருகே டேம்ஸ் சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் வந்த ஒரு இளைஞா் தடுமாறி, வாகனத்துடன் கீழே விழுந்தாா். இதைப் பாா்த்த காா்த்திகேயன், ஓடிச் சென்று அவரை தூக்கி விட்டாா்.மேலும் இளைஞா் மீது மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தாா். அபராதத்தை செலுத்திவிட்டு, வாகனத்தை மறுநாள் எடுத்துச் செல்லும்படி போலீஸாா் அந்த இளைஞரிடம் கூறினா். ஆனால் அந்த இளைஞா் தகராறு செய்து, காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயனை தாக்கினாா். இதைத் தடுத்த காவலா் சிவகுருநாதனும் தாக்கப்பட்டாா்.இதையடுத்து அங்கிருந்த பிற போலீஸாா், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து கைது செய்தனா். பின்னா் விசாரணைக்காக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். விசாரணையில் அவா், சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாா்க் வயது (23) என்பது தெரியவந்ததுள்ளது.
.

 

Tags :

Share via