638 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்
இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியது முதலே ஏற்றத்தில் இருந்த நிலையில் சற்று முன் முடிவடைந்த பங்குச் சந்தை புள்ளிகள் 638.70 உயர்ந்து 52,837.21 என்ற புள்ளியில் சென்செக்ஸ் வர்த்தகம் முடிவடைந்தது
அதேபோல் நிப்ட் இன்று 191.95 புள்ளிகள் உயர்ந்ததை அடுத்து 15824.05
என்ற புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாளையும் பங்குச்சந்தை உயர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம் என்றும் பங்கு சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய வர்த்தகத்தில், பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, டைட்டன் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகின்றன. மற்ற ஆசிய பங்குச் சந்தைகளில் காணப்படும் ஏற்றம் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகளும் உயர்ந்து வர்த்தகமாவதாக கூறப்படுகிறது.
Tags :