இறந்த மூதாட்டியின் உடலை எரியூட்ட இடமில்லாமல் குளத்துக்கரையில் எரியூட்டும் அவலம்.

by Editor / 21-12-2023 11:25:49pm
இறந்த மூதாட்டியின் உடலை எரியூட்ட இடமில்லாமல் குளத்துக்கரையில் எரியூட்டும் அவலம்.

தென்காசி மாவட்டம்  தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வீ.கே.புதூர் பரங்குன்றபுரம் அருகில் உள்ளது லட்சுமிபுரம் கிராமம் சுமார் 2000 மக்கள் அந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். பல்வேறு தரப்பைச் சார்ந்த மக்கள் வசித்து வருகின்ற பகுதியில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்த குடும்பத்தினர் இறந்தவர்கள் உடல்நிலை எரியட்டுவதற்கு மயான கரைகள்   எதுவும் கிடையாது. ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குளத்தின்  கரையில் தான் அவர்கள் இறந்தவர்களின் உடல்களை எறியூட்டி  வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது தொடர்ந்து ஏராளமான ஏரிகளும், குளங்களும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் லட்சுமிபுரம் கிராமத்தில் சின்னத்தம்பி என்ற அவருடைய மனைவி மாடத்தி அம்மன் என்பவர் இன்று காலமானார். இதன் தொடர்ச்சியாக அவரது உடலை எரியூட்டுவதற்கு லட்சுமிபுரம் கிராமத்தில் இருந்து எரியூட்டும் குளத்துக்கரை வரை செல்ல முடியாமல் குறிப்பிட்டத்தூரம் வரை வாகனத்தில் இறந்தவர் உடலை கொண்டு சென்று பின்பு அங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் கழுத்தளவு நீரில் மூதாட்டியின் உடலை தூக்கிச் சென்று மாலை 5 மணியளவில் ஏறியூட்டினார். ஊர் பகுதியில் பிற சமுதாயத்தினருக்கு இறந்தவர்களுக்கு எரிமேடை இருக்கும் போது பட்சத்தில் இந்த குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு மட்டும் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில்  நடந்து சென்றும் பாதையில்லாத நீரோடை வழியாக நிரந்தர கட்டிடம் இல்லாத குளத்து கரையில் இறந்தோர் உடலை எரியட்டும் நிலைக்கு இந்த கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.தங்களுக்கும் ஊரருகில் இறந்தவர்களது உடலை எரியூட்ட வசதிகளை ஏற்ப்டுத்திதரவேண்டுமென அந்தபகுதியை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

Tags : இறந்த மூதாட்டியின் உடலை எரியூட்ட இடமில்லாமல் குளத்துக்கரையில் எரியூட்டும் அவலம்.

Share via