மக்களின் நம்பிக்கையை பாஜக அரசு இழந்துவிட்டது

by Staff / 08-08-2023 05:46:32pm
மக்களின் நம்பிக்கையை பாஜக அரசு இழந்துவிட்டது

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் தற்போது நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி விவாதத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கௌரவ் கோகோய் எம்.பி. விவாதத்தை தொடங்கினார். இதனையடுத்து, நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் குறித்து மக்களவையில் எம்.பி. திருமாவளவன் தமிழில் பேசினார். அதன்படி, “மணிப்பூர் மாநிலத்தில் மக்கள் இன்னும் பாதுகாப்பாக வாழ முடியவில்லை. பிரதமர் மோடி மீதான நம்பிக்கையை நாடு இழந்துள்ளது; பாஜக தலைமையிலான மத்திய அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via