நகை வியாபாரியிடம் 70 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம்.5 லட்சம் கொள்ளை.1மணிநேரத்தில் 2 பேர் கைது.
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொழுவூர் சுடுகாடு அருகே சௌகார்பேட்டையைச் சேர்ந்த சேஷாராம் என்ற நகை வியாபாரி திருவள்ளூர் பகுதியில் விற்பனை செய்வதற்காக தங்கப்பொருட்களை எடுத்து வந்தபோது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை தாக்கி அவர் கொண்டுவந்த தங்கப்பொருட்களையும்,பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பிய நிலையில் தகவல் அறிந்த செவ்வாய் பேட்டை காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து அவர்களிடமிருந்து 70 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ தங்கம் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்து ஒதிக்காடு பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்து செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தப்பி ஓடிய நான்கு பேரை போலீசார் வலைவீசிதேடிவருகின்றனர்.
Tags : 70 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம்.5 லட்சம் கொள்ளை