நாங்குநேரி சம்பவம்: ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு

நாங்குநேரியில் பட்டியலின மாணவன் தாக்கப்பட்டது தொடர்பாக நீதிபதி சந்துரு தலைமையில் விசாரணை குழு அமைக்கபர். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமானப் பிரச்சினை. மாணவர்களிடையே சாதி, பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு, அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பித்திடும்' என கூறப்பட்டுள்ளது.
Tags :