அதிமுக சார்பில் ஆகஸ்டு 20ல் மதுரையில் மாபெரும் எழுச்சி மாநாடு- கடம்பூர் ராஜூ தலைமையில்ஆலோசனை கூட்டம்

by Admin / 13-08-2023 12:47:57am
அதிமுக சார்பில் ஆகஸ்டு 20ல் மதுரையில் மாபெரும் எழுச்சி மாநாடு- கடம்பூர் ராஜூ தலைமையில்ஆலோசனை கூட்டம்

அதிமுக சார்பில் ஆகஸ்டு 20ல் மதுரையில் மாபெரும் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளதையொட்டி - கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அதிமுக மாநாடு மதுரையில் வரும் 20ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாபெரும் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள கிருஷ்ணா நகர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ இல்லத்தில் வைத்து தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்டம்  சார்பில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் அதிமுக நிர்வாகியிடம் ஆலோசனைக் கூட்டத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகஸ்ட் 20 மதுரையில் அதிமுக சார்பில் மாபெரும் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது இம்மான் நாட்டிற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் இருந்து 20,000 மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பிக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுடன் பேசினார். பின்னர் அதிமுக நிர்வாகிகளுக்கும் மாபெரும் எழுச்சி மாநாடு விளம்பர ஸ்டிக்கரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து திமுக நிர்வாகி காளிமுத்து அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இக்கூட்டத்துக்கு தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்,

அதிமுக சார்பில் ஆகஸ்டு 20ல் மதுரையில் மாபெரும் எழுச்சி மாநாடு- கடம்பூர் ராஜூ தலைமையில்ஆலோசனை கூட்டம்
 

Tags :

Share via