மதுரை  காவல்துறை விசாரணைக்கு அழைத்துசென்ற இளைஞர் சகதியில் சிக்கி உயிரிழப்பு.

by Staff / 10-10-2025 12:11:21am
மதுரை  காவல்துறை விசாரணைக்கு அழைத்துசென்ற இளைஞர் சகதியில் சிக்கி உயிரிழப்பு.

மதுரை அண்ணாநகர் காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட யாகப்பாநகர் பகுதியை சேர்ந்த மூன் தினேஷ் (24) மற்றும் அஜித்கண்ணா, பிரகாஷ் ஆகிய 3 இளைஞர்கள் மீதும்  வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மூவரையும் 3 பேரையும் விசாரணைக்காக அண்ணாநகர் காவல்துறையினர் அழைத்துசென்று
 வண்டியூர் அம்மா திடல் அருகே புறக்காவல் நிலையத்தில் காவல்துறையினர் விசாரணை செய்த பின்னர் அண்ணாநகர் காவல்நிலையத்திற்கு 3 பேரையும் அழைத்துசெல்ல வாகனத்தில் ஏற்றியபோது திடிரென தினேஷ்குமார் தப்பியோடியுள்ளார்.

இதனால் காவல்துறையினர் தினேஷ்குமாரை துரத்தி சென்றபோது வண்டியூர் கால்வாயில் அவன் குதித்தபோது நீரில் சகதியில் சிக்கி உயிரிழந்தான்.இது குறித்த தகவலின் அடிப்படையில் தல்லாகுளம் தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு.இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை

 

Tags : மதுரை  காவல்துறை விசாரணைக்கு அழைத்துசென்ற இளைஞர் சகதியில் சிக்கி உயிரிழப்பு.

Share via

More stories